அஷ்டபதீ³ - 18 - மூலமும் பொருளும்
தோழிகளை சித்தரிக்கும் ஜாமினி ராயின் ஓவியம் சுலோகம் 1: குஸும-ஶராஸன-தூ³னாம்ʼ ரதி-ஸுக²-ஹீனாம்ʼ நவாக³ஸா தீ³னாம் | த்⁴ருʼத-மத³-கலஹாதீ⁴னா-மஜஹன்-மௌனாம்ʼ ஸகீ² ஜகா³தை³னாம் || சுலோகம் 1 - பதம்பிரித்து: குஸும-ஶராஸன-தூ³னாம்ʼ ரதி-ஸுக²-ஹீனாம்ʼ நவாக³ஸா தீ³னாம் . த்⁴ருʼத-மத³-கலஹாதீ⁴னாம்ʼ அஜஹன்-மௌனாம்ʼ ஸகீ² ஜகா³த³ ஏனாம் விளக்கமும் குறிப்புகளும் : மலர்க்கணையோனால் வருத்தப்பட்டு, இன்பமற்று இருந்த, புதிய தவற்றால் வாடியிருந்த, இறுமாப்பினால் பிணக்குக்கு இடம்தந்து, மௌனத்தை விடாமலிருந்த அவளிடம், தோழி (பின்வருமாறு) சொன்னாள். இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள் கொண்டது. முருகன் தாமதமாக வந்ததும், வள்ளி மிகவும் கோபித்ததும் இரண்டும் “புதிய/ சமீபத்திய தவறு “ என்று கவி சொல்வதாக கொள்ளலாம். —---------------------------------------------------------------------------------------------------------------------------- அஷ்டபதீ³ - 18 (யது³குல-காம்போ⁴ஜி ராக³ம், ஆதி³ தாளம் ) கு³ஹ-முபனத-மிஹ சிர-மபி⁴லஷிதம் . கலய நயன-விஷயம்ʼ து⁴ரி வினதம் .. 1.. (பதப்பிரிவு : கு³ஹம் + உபனதம் + இஹ, சிரம