அஷ்டபதீ³ - 3 - மூலமும் பொருளும்
முஹுர்னத்வா ஸ்ம்ருʼத்வா கு³ஹ-கு³ண-மருத்³த்⁴வா த்⁴ருʼதி-லவம் |
ஸ்மராதீ⁴னாம்ʼ தீ³னாம்ʼ ஜ்வர-மஸஹமானாம்ʼ விரஹஜம்ʼ
ஸகீ² வாணீ-மேணீ-ஶிஶு-த்³ருʼஶ-மபா⁴ணீத் ஸுதி⁴ஷணா ||
வனே வல்லீம்ʼ பி⁴ல்லீம்ʼ விகச-நவமல்லீ-ம்ருʼது³-தனும்ʼ
முஹுர்னத்வா ஸ்ம்ருʼத்வா கு³ஹ-கு³ணம் அருத்³த்⁴வா த்⁴ருʼதி-லவம்
ஸ்மராதீ⁴னாம்ʼ தீ³னாம்ʼ ஜ்வரம் அஸஹமானாம்ʼ விரஹஜம்ʼ
ஸகீ² வாணீ-மேணீ-ஶிஶு-த்³ருʼஶம் அபா⁴ணீத் ஸுதி⁴ஷணா
காட்டில் , மலர்ந்த புது மல்லிகை போன்ற மென்னுடல் கொண்ட, மான்கன்று போன்ற விழிகளை உடைய வள்ளியை பலமுறை வணங்கி , குகனின் குணங்களை நினைத்து, தைர்ய இழப்பை தடுக்க முடியாமல், மதன் வசமாகி வருந்தி, விரஹத்தால் உண்டான ஜ்வரத்தை தாங்க முடியாதவளாக இருந்த அவளிடம் , நல்லறிவு உள்ள அவள் தோழி பேசினாள்.
- இது சிகரிணீ என்ற, வரிக்கு 17 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது
தவ ஶ்ராந்த்யா꞉ ஶாந்த்யை ப்ரியஸகி² நிஶா-ஜாக³ர-பரி-
ஶ்ரமாத் பத்³மோஶீராத்³யுபஹரண-ஜாதாத³பி முஹு꞉ |
ப்ரபு³த்³தா⁴ நித்³ராயா꞉ ஸ்வயமுபனதாயா அஹமஹோ
ப்³ருவே ஸ்வப்னோத³ந்தம்ʼ ஶ்ருணு ஸமவதே⁴ஹி த்யஜ ஶுசம் ||
தவ ஶ்ராந்த்யா꞉ ஶாந்த்யை ப்ரியஸகி² நிஶா-ஜாக³ர-பரி-
ஶ்ரமாத் பத்³ம உஶீராதி³ உபஹரண-ஜாதாத் அபி முஹு꞉ .
ப்ரபு³த்³தா⁴ நித்³ராயா꞉ ஸ்வயம் உபனதாயா அஹமஹோ
ப்³ருவே ஸ்வப்னோத³ந்தம்ʼ ஶ்ருணு ஸமவதே⁴ஹி த்யஜ ஶுசம்
"பிரிய சகியே ! இரவில் விழித்திருந்ததாலும் , தாமரை, வெட்டிவேர் முதலியவற்றாலும் உண்டான உன் சோர்வு தணிவதற்காக , தானாக வந்த தூக்கம் நீங்கி எழுந்த நான் , என் கனவை சொல்கிறேன். கவனமாக கேட்டு, வருந்துவதை விடு. "
- இது சிகரிணீ என்ற, வரிக்கு 17 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது
- வள்ளியின் ஜுரம் குறைவதற்காக வெட்டிவேர், தாமரை முதலிய சைத்தியோபசாரங்கள் தரப்பட்டன
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதீ³ -3 (வஸந்தா ராக³ம், ஆதி³ தாளம்)
ஸ்கந்த³-மஹீப்⁴ருʼதி ராஜத-பூ⁴த⁴ர-ஶ்ருʼங்க³-க³தே ப்⁴ருʼஶ-துங்கே³ .
நவமணி-மண்ட³ல-மண்டி³த-ஸௌத⁴-தலாந்திக-கேஸர-ரங்கே³ .. 1..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
கந்தன் என்ற மன்னன், வெள்ளிமலையின் சிகரத்தில் உள்ள, உயரமான, நவரத்தினங்கள் அணிசெய் மாளிகைகள் அருகில், சுரபுன்னை மரத்தின் மேடையில் விளங்க, (பூங்காவில்..)
பல்லவீ
ஸகி² ஶ்ருʼணு வலரிபு-து³ஹித்ருʼ-ஸதே³ஶே .
ஹ்ருʼஷ்யதி ஹர-தனுபூ⁴꞉ ஸுரபா⁴விஹ லஸது³ப-கானன-தே³ஶே ..
(பதப்பிரிவு: ஸுரபௌ⁴ + இஹ , லஸத்³ + உப-கானன )
விளக்கம்:
சகியே கேள் ! இந்திரன் மகள் அருகிருக்க , அரன்மகனான முருகன் , இங்கு நறுமணமுள்ள, பிரகாசமான பூங்காவில், களிக்கிறான்.
மது⁴ர-மரந்த³-மதா³குல-மஞ்ஜுல-கீ³த-மிலிந்த³-கத³ம்பே³ .
விகச-குஸும-ப⁴ர-நாமித-பா⁴ஸுர-கேஸர-தரு-நிகுரும்பே³ .. 2..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
இனிய தேனைக்கண்டு களிப்படைந்து, மதுரகீதம் இசைக்கும் வண்டுக்கூட்டங்கள் கொண்ட , (மேலும்) விரிந்த மலர்களின் பாரத்தால் வளைந்த, ஒளிரும் மகிழ மரங்கள் நிறைந்த, (பூங்காவில்..)
பதி²க-மனோ-ப்⁴ருʼஶ-கம்பன-பண்டி³த-சம்பக-ஸம்பது³தா³ரே .
ஸுலலித-வகுல-குலோல்லாஸன-வதி தூ⁴லி-விதூ⁴னித-தீரே .. 3..
(பதப்பிரிவு : ஸம்பத்³ + உதா³ரே, குல + உல்லாஸன)
விளக்கம்:
(அன்புடையவரை பிரிந்து) பயணம்செய்பவர்களின் மனங்களை நடுங்கச் செய்வதில் திறமையுள்ள செண்பகங்களின் அழகு நிரம்பிய, (மேலும்) மிக வசீகரமான மகிழமரங்களின் பிரகாசமும், பூந்தாதுக்கள் சிதறிய (தடாகக்) கரைகளுள்ள (பூங்காவில்)
தி³னமணி-கர-பரிரம்ப⁴-விகஸ்வர-ஸாரஸினீ-ரமணீயே .
ருசிர-ம்ருʼணால-லதாஸன-ஸுஹித-மரால-நினத³-கமனீயே .. 4..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
சூரிய கிரணங்களின் அரவணைப்பில் மலர்ந்த தாமரைகளுடன் ரமணீயமான , எழிலான தாமரை இலை என்ற ஆசனத்தில் இதமாக அமர்ந்த அன்னங்களின் கூவுதல்களால் விரும்பத் தக்க (பூங்காவில்)
மனஸிஜ-நரபதி-ஸஹக்ருʼதி-படுதம-புஷ்பித-மந்த்ர-ரஸாலே .
ஸும-ஸமய-ஶ்ரீ-திலக-மதிப்ரத²-திலக-மஹீருஹ-ஜாலே .. 5..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
மன்மதன் என்ற அரசனுக்கு துணைபுரிவதில் வல்ல, மலர்ந்து மந்திராலோசனை செய்யும் மாமரங்கள் உடைய, வசந்தகால லக்ஷ்மியின் திலகம் என்றெண்ணப்பட்டு புகழ்பெற்ற திலக (தழுதாழை) மரங்களின் கூட்டங்கள் நிறைந்த (பூங்காவில் )
புஷ்பித-மாத⁴விகா-பரிரம்ப⁴ண-விகஸித-சாரு-லவங்கே³ .
மத³ன-க்ருʼபாண-ப்⁴ரமகர-கிம்ʼஶுக-து⁴த-பதி²காப்³ஜ-த்³ருʼக³ங்கே³ .. 6..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
மலர்ந்த மாதவிக்கொடியின் அணைப்பில் சிலிர்த்து மலர்ந்த அழகிய இலவங்கமரங்கள் நிறைந்த , (பிரிந்து) பயணம் சென்றவர்களின் மனைவியரின் அங்கங்களை தாக்கும் மதனின் வாள்தானோ என்ற பிரமையை உருவாக்கும் புரச மலர்கள் நிறைந்த (பூங்காவில்)
குபித-வதூ⁴ஜன-மான-நிவாரண-ஹர்ஷித-யுவஜன-க³ம்யே .
ஸௌரப⁴-பல்லவ-சர்வண-புஷ்யத்-கோகில-கூஜன-ரம்யே .. 7..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
ஊடல் கொண்ட மனைவியர்களின் பாராமுகம் நீங்கியதால் மகிழ்ந்த இளைஞர்கள் அணுகத்தக்க, வாசனையுள்ள (மாந்)தளிர்களை மென்று, வலுப்பெற்ற குயில்களின் ஓசையால் இனிமையான (பூங்காவில்)
குரப³க-ரேணு-ஸமாவ்ருʼத-த³ஶ-தி³ஶி வித³லித-நீல-தமாலே .
யுவஜன-ரதிஜ-ஶ்ரமஜல-வாரக-மலயஜ-மாருத-பா³லே .. 8..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
மருதோன்றியின் பூந்தாதுக்கள் பத்து திசைகளிலும் பரவிய, நீல தமாலமலர்கள் பூத்திருக்கும், (மற்றும்) பொதிகைமலையில் பிறந்த இளந்தென்றல், அனுபோகங்களினால் உண்டான இளையோர்களின் வியர்வையை அகற்றும் (பூங்காவில்)
விஶ்வநாத²-கவினா ரசிதமித³ம்ʼ ஷண்முக²-ப⁴க்தி-நிதா³னம் .
ஸுரபி⁴-ஸமய-வன-வர்ணன-நிரதம்ʼ ஜயது சிரம்ʼ பு⁴வி கா³னம் .. 9..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கம்:
விசுவநாத கவியால் இயற்றப்பட்ட, முருகனிடம் பக்தியை வளர்க்கும், வசந்த காலத்தை வர்ணனை செய்யும் இந்த பாடல், உலகில் நெடுநாள் விளங்கட்டும் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------சுலோகம் 3
மத³கல-கலகண்டீ²-கந்த⁴ரானர்க³லோத்³யத்-
கலகல-ரவ-பூரை꞉ போஷயன் பஞ்சபா³ணம் |
க⁴ட-ப⁴வ-கி³ரி-ஜாதோ வாத-போதோ(அ)பி⁴யாத-
ஸ்தபதி விரஹி-சேதோ மார-ஸேனாதி⁴-நேதா ||
மத³கல-கலகண்டீ²-கந்த⁴ர அனர்க³ல உத்³யத்-
கலகல-ரவ-பூரை꞉ போஷயன் பஞ்சபா³ணம் |
க⁴ட-ப⁴வ-கி³ரி-ஜாதோ வாத-போத: அபி⁴யாத:
தபதி விரஹி-சேதோ மார-ஸேனாதி⁴-நேதா ||
விளக்கமும் குறிப்புகளும்
கும்பமுனியான அகஸ்தியரின் மலையில் தோன்றிய இளந்தென்றல், மதனின் சேனாதிபதியாக இருந்து , களிப்புற்ற குயிலின் தொண்டையிலிருந்து உதிக்கும் தடையற்ற இனிய ஓசைகளால் மன்மதனுக்கு வலுவூட்டி, பிரிவுற்றவரின் மனங்களை வாட்டுகிறது.
- இது மாலினீ என்ற, வரிக்கு 15 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது
சுலோகம் 4
உத்பு²ல்லன்-நவ-மல்லிகா-பரிமலோத்³கா³ர-ப்ரியம்பா⁴வுக-
ஶ்ரீக²ண்டா³சல-வாத-தூ⁴த-விகஸச்சாம்பேய-பூ⁴மீ-ருஹா꞉ |
ப்⁴ருʼங்கா³லிங்கி³த-ப்⁴ருʼங்க³-ஜ²ங்க்ருʼதி-மஹா-ஹுங்கார-ஸந்தர்ஜிதை꞉
நீயந்தே கத²மப்யமீ விரஹிபி⁴ர்வாஸந்திகா வாஸரா꞉ ||
சுலோகம் 4 - பதம்பிரித்து
உத்பு²ல்லன்-நவ-மல்லிகா-பரிமல உத்³கா³ர-ப்ரியம்பா⁴வுக-
ஶ்ரீக²ண்ட³ அசல-வாத-தூ⁴த-விகஸத்- சாம்பேய-பூ⁴மீ-ருஹா꞉ .
ப்⁴ருʼங்கா³ ஆலிங்கி³த-ப்⁴ருʼங்க³-ஜ²ங்க்ருʼதி-மஹா-ஹுங்கார-ஸந்தர்ஜிதை꞉
நீயந்தே கத²மபி அமீ விரஹிபி⁴꞉ வாஸந்திகா꞉ வாஸரா꞉ .
பெண்வண்டுகளின் அணைப்பைப் பெற்ற வண்டுகளின் ரீங்காரம் என்ற அச்சுறுத்தும் ஒலிகளால் மிரட்டப்பட்ட பிரிவுற்றவர்கள், மலர்ந்த புதுமல்லிகையின் மணம் பரவுவதால் விரும்பத்தக்கதான, சந்தன மலையான பொதிகையின் காற்றினால் அசையும் மலர்ந்த செண்பக மரங்கள் நிறைந்த இந்த வசந்தகால நாட்களை மிகவும் கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.
- இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் என்ற, வரிக்கு 19 அட்சரம் கொண்ட சந்தத்தில் அமைந்துள்ளது
Comments
Post a Comment