அஷ்டபதீ³ - 5 மூலமும் பொருளும்
சுலோகம் 1:
ஶ்ருத்வா ஸ்வீய-ஸகீ²-வசோ வனசரீ க்ருʼச்ச்²ரேண ஶய்யா-தலாத்
உத்தா²யாதனு-தாப-வேபித-தனு꞉ நிஶ்வாஸ-பர்யாகுலா |
விஶ்வஸ்யாத்ம-ஸகீ²ம்ʼ ஸக³த்³க³த³மித³ம்ʼ பா³ஷ்பாயமாணா(அ)ப்³ரவீத்
விஶ்வாதீ⁴ஶ-க³ஜாஸ்ய-ஸோத³ர-மஹா-லாவண்ய-க்ருʼஷ்டாந்தரா ||
சுலோகம் 1 பதம்பிரித்து:
ஶ்ருத்வா ஸ்வீய-ஸகீ²-வச: வனசரீ க்ருʼச்ச்²ரேண ஶய்யா-தலாத்
உத்தா²ய அதனு-தாப-வேபித-தனு꞉ நிஶ்வாஸ-பர்யாகுலா .
விஶ்வஸ்ய ஆத்ம-ஸகீ²ம்ʼ ஸக³த்³க³த³ம் இத³ம்ʼ பா³ஷ்பாயமாணா அப்³ரவீத்
விஶ்வாதீ⁴ஶ-க³ஜாஸ்ய-ஸோத³ர-மஹா-லாவண்ய-க்ருʼஷ்ட அந்தரா .
விளக்கமும் குறிப்புகளும் :
தன் சகியின் பேச்சைகேட்ட வேடுவப்பெண்ணாகிய வள்ளி, சிரமப்பட்டு படுக்கையிலிருந்து எழுந்து, காதல் வசத்தால் நடுக்கமுற்று, பெருமூச்சுடன் கலக்கமுற்று, தன் தோழியை நம்பி, குரல் தழுதழுக்க, கண்ணீருடன் இவ்வாறு சொன்னாள். உலகநாதனாகிய, யானைமுகனின் தம்பியாகிய முருகனின் பேரழகினால் கவரபட்ட உள்ளத்தினளாக அவள் இருந்தாள்.
இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
அஷ்டபதீ³ 5 (தோடி³ ராக³ம், ஆதி³ தாளம்)
குஞ்ஜர-வத³ன-ஸஹோத³ர-மாஶ்ரித-ஜன-பரிபாலன-தீ⁴ரம் .
மது⁴பை꞉ ஸம்ப்⁴ருʼத-மஞ்ஜு-மதூ⁴த்³ப⁴வ-புஷ்ப-விசித்ரித-ஹாரம் .. 1..
(பதப்பிரிவு : ஸஹோத³ரம்+ ஆஶ்ரித )
விளக்கம்:
யானைமுகனின் தம்பியாகிய முருகன், தன்னை சரணடைந்த மக்களை காக்கும் தீரன். வண்டுகள் மொய்க்கும் இனிய தேனை பெருக்கும் மலர்களால் செய்த பலவித மாலைகள் அணிந்தவன்.
பல்லவீ
ஶைலே கு³ஹமிஹ கலித-விஹாரம் . ஸகி² கலயே ஹ்ருʼதி³ கி³ரிஶ-குமாரம்
(பதப்பிரிவு : கு³ஹம் + இஹ)
விளக்கம் :
தோழி ! குன்றின்மேல் விளையாடும் சிவகுமாரன் குகனை இங்கு என்னெஞ்சில் எண்ணிப்பார்க்கிறேன்.
மேசக-ராஜித-மேசகி-தல்லஜ-வாஹன-மாத்த-ஶராஸம் .
ஹஸித-பசேலிம-பி³ம்ப³-ப²லாத⁴ர-ஸங்க்ரமணாஞ்சித-ஹாஸம் .. 2..
(பதப்பிரிவு : வாஹனம் + ஆத்த , ப²ல + அத⁴ர, ஸங்க்ரமண + அஞ்சித)
விளக்கம் :
நீலநிறத்துடன் விளங்கும் சிறந்த மயிலை வாகனமாக உடையவன். வில்லேந்தியவன். பழுத்த கோவைப்பழத்தை இகழும் இதழ்களில் பரவி அணிசெய்யும் புன்னகையுடன் திகழ்பவன்.
கிங்கிணி-ஸங்கி³-ஶுகோத³ர-ஸோத³ர-மணி-க⁴டிதாங்கி³க-பா⁴ஜம் .
கீர-முகா²க்ருʼதி-நக²-முக²-ஶீலித-வலரிபுஜோத்³ய-து³ரோஜம் .. 3..
(பதப்பிரிவு : ஶுக + உத³ர, முக² + ஆக்ருʼதி, வலரிபுஜா + உத்³யத் + உரோஜம் )
விளக்கம் :
சதங்கைகள் கட்டிய, கிளியின் வயிற்றுக்கு சமமான (மென்மையான), மணிகள் பதித்த மேல்சட்டை அணிந்தவன். இந்திரன் மகளான தெய்வானையை அணைக்கும், கிளியின் அலகுபோன்ற நகங்கள் கொண்ட கைகளை உடையவன்.
அத⁴ர-தலாஹித-ஸுமது⁴ர-வைணவ-ராவ-வஶீக்ருʼத-லோகம் .
கேது-ஸமுஜ்ஜ்வல-தம-சரணாயுத⁴-போ³தி⁴த-வைபு³த⁴-லோகம் .. 4..
விளக்கம் :
இதழ்த்தலத்தில் வைத்த குழலின் மிக இனிய ஒலியால் உலகையே வசப்படுத்துபவன். கொடியில் தகதகக்கும் சேவலின் ஒலியால், ஞானிகளின் கூட்டத்தை விழித்தெழச் செய்பவன்.
குறிப்பு
வைணவ என்றால் வேணுவுடன் தொடர்புடையது
பஞ்சஶராக்ருʼதி-வஞ்சன-தீ³க்ஷித-விக்³ரஹ-காந்தி-மனோஜ்ஞம் .
வாரண-வத³ன-ஸுராரி-கலேப³ர-தா³ரண-லப்³த⁴-ஸமஜ்ஞம் .. 5..
(பதப்பிரிவு : பஞ்சஶர + ஆக்ருʼதி)
விளக்கம் :
ஐங்கணையோனான மன்மதனின் வடிவத்தை தோற்கச்செய்வதில் உறுதிபூண்ட மேனியழகால் மனம்கவர்பவன். யானை முகம் கொண்ட அசுரனான தாரகாசுரனின் உடலைத் துளைத்து புகழடைந்தவன்.
காஞ்சன-தந்து-விநிர்மித-சேல-விபா⁴ஸுர-நைஜ-வலக்³னம் .
பரம-த³யாலுதயா லகு⁴-தாரித-ஸம்ʼஸ்ருʼதி-ஸாக³ர-மக்³னம் .. 6..
விளக்கம் :
பொன்னிழைகளால் நெய்யப்பட்ட துகிலுடன் ஒளிவீசும் இடையுடையவன். பெருங்கருணையுடன், சம்சாரக் கடலில் மூழ்கியவரையும் எளிதில் கரைசேர்ப்பவன்.
ஶ்ருதி-புட-மூல-க³தாதி-க்ருʼபா-ரஸ-ஸார்த்³ர-விலோசன-கஞ்ஜம் .
வைணிக-முனிவர-வீணா-வர்ணித-ஸங்க³த-ஶுப⁴கு³ண-புஞ்ஜம் .. 7..
(பதப்பிரிவு : க³த + அதி-க்ருʼபா)
விளக்கம் :
காதளவு சென்ற, அதிக தயாரசத்தால் நனைந்த தாமரைக்கண்களை உடையவன். வீணை வாசிக்கும் சிறந்த முனிவரான நாரதரின் வீணையுடன் வர்ணிக்கப்பட்ட , ஒன்றுகூடிய நற்குணங்களின் குவியலானவன்.
முக²ரித-ஹாடக-கல்பித-காஞ்சீ-பரிஹித-கடி-க³த-சேலம் .
மணி-மகுடீ-பரிரஞ்ஜித-ஶீர்ஷம்ʼ தை³வத-ஸைனிக-பாலம் .. 8..
விளக்கம் :
கிணுகிணுக்கும், பொன்னால் செய்த ஒட்டியணத்தால் சூழப்பட்ட இடையாடை கொண்டவன். ரத்தினங்கள் பதித்த கிரீடத்தால் எழில் பெறும் சிரத்தை உடையவன். தேவர்களின் படைத்தலைவன்.
விஶ்வநாத²-கவி-ப⁴ணிதமித³ம்ʼ கு³ஹ-மோத³கரம்ʼ ஸுவிகாஸம் .
ப⁴ஜது ஸதை³வ குமார-கு³ணாவலி-வர்ணன-தத்த்வ-விலாஸம் .. 9..
(பதப்பிரிவு : ப⁴ணிதம் + இத³ம், ஸதா³ + ஏவ , கு³ண + ஆவலி
விளக்கம்:
விசுவநாதகவி இயற்றிய, குகனை மகிழ்விப்பதான,. குமரனின் குண வரிசைகளை வர்ணிக்கும் கொள்கையுடன் விளங்கும் இப்பாடல் எப்போதும் (எங்கும்) பரவட்டும்!
Comments
Post a Comment