அஷ்டபதீ³ - 8 மூலமும் பொருளும்
சுலோகம் 1:
உபாத்³ரி-குஞ்ஜ-நிலயம்ʼ ப³ஹுலானந்த³-வர்த⁴னம் |
வல்லீ-வயஸ்யா வாஸந்தீ வாசமூசே ஸக³த்³க³த³ம் ||
சுலோகம் 1 பதம்பிரித்து
உபாத்³ரி-குஞ்ஜ-நிலயம்ʼ ப³ஹுலா ஆனந்த³-வர்த⁴னம் .
வல்லீ-வயஸ்யா வாஸந்தீ வாசம் ஊசே ஸக³த்³க³த³ம்
விளக்கமும் குறிப்புகளும் :
மலையருகே , கொடிவீட்டில் இருக்கும், கார்த்திகை மாதருக்கு ஆனந்தத்தை பெருக்கும் முருகனிடம், வள்ளியின் தோழியான வாஸந்தி, குரல் தழுதழுக்க இந்த சொற்களை உரைத்தாள்.
இது அனுஷ்டுப்⁴ - வரிக்கு 8 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
பஹுலா என்பது கார்த்திகை நக்ஷத்திரத்தின் மறுபெயர்
—-----------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதீ³ - 8 (ஸௌராஷ்ட்ர ராக³ம், ஆதி³ தாளம்)
கோகில-காகலிகாமபி கலயதி கர்ண-புடே(அ)தி-கடோ²ரம் .
த³ர்பக-ப⁴ட-குல-வீர-வசன-ததி-மிவ விஶதி³த-மத³-ஸாரம் ..1..
(பதப்பிரிவு : காகலிகாம் + அபி, ததிம் + இவ)
விளக்கம்:
குயிலின் மெல்லிசையையும் காதினில் கடியதாக கருதுகிறாள். மன்மதனின் சேனைவீரர்களின் வீர வசனக்கோவை போல, தற்பெருமையை தெரிவிப்பதாக (அதைக் கருதுகிறாள்).
பல்லவீ
தாபமிதா தவ ஜாயா ஶ்ரீகு³ஹ .
ஶப³ர-ந்ருʼபதி-தனயா ஸ்மர-வேத³னயா த³யனீயா ..
விளக்கம்:
ஸ்ரீ குகனே! உங்கள் மனைவி தாபமடைந்துள்ளாள். காதல் துன்பத்தால் (வருந்தும்) வேடர்மன்னன் மகள், (உங்கள்) கருணைக்குரியவள்!
ஸ்வானுப⁴வேன கலா-ப்⁴ருʼத-மதுஹின-கர-மஹரீஶ-ஸமானம்ʼ
நிஶ்சினுதே காரண-கு³ண-ஸங்க்ரம-நய-மபி குருதே மானம் .. 2..
(பதப்பிரிவு : ப்⁴ருʼதம் + அதுஹின-கரம் + அஹரீஶ-ஸமானம் )
விளக்கம்:
தன் அனுபவத்தில், சந்திரன், வெப்பமான கிரணங்களால் சூரியனுக்கு சமானமாக இருப்பதைக்கருதி, (குளிர்ந்த கதிர்கள் கொண்டவன் என்ற பெயருக்கு) காரணமான தன் குணங்களையே கடந்திருக்கும் அவன் நடத்தையைக்கண்டு கோபம் கொள்கிறாள்.
மனஸி கரோதி படீர-மஹீத்⁴ர-ஸமீர-கிஶோர-விஹாரம் .
பித்ருʼபதி-ஹரித³தி⁴-க³மன-வஶாதி³வ து³꞉ஸஹ-வைஶஸ-கோ⁴ரம் .. 3..
(பதப்பிரிவு : ஹரித்³ + அதி⁴க³மன-வஶாத் + இவ )
விளக்கம்:
சந்தனமலையினின்று வரும் இளந்தென்றலின் விளையாட்டை, தாங்கமுடியாத துயரைத்தரும் கோரமானதாக மனதில் கொள்கிறாள். அது யமனின் திசையிலிருந்து வருவதனால் போலும்.
ஹ்ருʼத³ய-குஹர-நிலயஸ்ய ஸுமாயுத⁴-பா³ண-பதா²த³வனம்ʼ தே .
ஸ்த²க³யதி ஹ்ருʼத³யம்ʼ கலயிது-மஸக்ருʼத் கர-யுக³த꞉ ஸத³னம்ʼ தே .. 4..
(பதப்பிரிவு : பதா²த் + அவனம், கலயிதும் + அஸக்ருʼத்)
விளக்கம்:
இதயக்குகையில் நிலைபெற்ற உம்மை, மன்மதனின் மலரம்புகளின் தாக்கத்திலிருந்து காக்க எண்ணி, அடிக்கடி உம் இருப்பிடமான தன் நெஞ்சை இரு கைகளாலும் மறைத்துக் கொள்கிறாள்.
சித்ர-படே ப்ரவிலிக்²ய ப⁴வந்தம்ʼ காங்க்ஷித-வத்யனுனேதும் .
லேக²ன-வஸ்து பரமபி ஸகம்பா நாஶகதே³வ க்³ரஹீதும் .. 5..
(பதப்பிரிவு : காங்க்ஷி-வதீ + அனுனேதும் , ந + அஶகத் + ஏவ)
விளக்கம்:
படத்தில் தங்களை எழுதி, சமாதானபடுத்த விரும்பி, ஆனால் நடுக்கம்கொண்டவளாக, எழுதுபொருள் எதையும் பிடிக்க முடியாமலே இருக்கிறாள்.
த⁴ரதி தனௌ ஸ்மர-க³த³-யுஜி நீரஸ-கீர்ண-குஸுமஶர-ஜாலம் .
மேசக-த்³ருʼகி³வ வியோகி³-ம்ருʼகா³ந்தக-மத³ன-வனேசர-ஜாலம் .. 6..
(பதப்பிரிவு : மேசக-த்³ருʼக் + இவ )
விளக்கம்:
காமநோயுற்ற தன்மேனியில் வாடிய மலர்க்கணைகளின் குவியலைத் தாங்குகிறாள். பிரிவுற்றவர்கள் என்ற மான்களை கொல்லும் மன்மதன் என்ற வேடனின் வலையை தாங்கும் (அதனுள் அகப்பட்ட) பெண்மான் போல இருக்கிறாள்.
கலயதி ஶைத்யோபசரண-மபி ப³ஹு-பரிஜன-கலித-மபார்த²ம் .
வேதி³-க³தானல- விஹிதமிவ க்⁴ருʼதம்ʼ தாப-ஸுபோஷ-ஸமர்த²ம் .. 7..
(பதப்பிரிவு : ஶைத்ய + உபசரணம் + அபி, கலிதம் + அபார்த²ம் , க³த + அனல- விஹிதம் + இவ )
விளக்கம்:
பல சேடியர் செய்யும் (சந்தனம் தடவுதல் முதலிய) தாபம் தீர்க்கும் உபசாரங்களை வீணென்று கருதுகிறாள். யாக குண்டத்தில் இருக்கும் நெருப்புக்கு நெய்வார்ப்பது போல, இவை வெப்பத்தை நன்கு வளர்க்க வல்லவை (என்று நினைக்கிறாள்)
த்⁴யாயதி நந்த³தி பஶ்யதி மூர்ச²தி ஸீத³தி கா³யதி ஶேதே .
ஶ்வஸிதி ஸ்வித்³யதி ஜ²டிதி த⁴வேதி ச நிக³த³தி பா³ஷ்பம்ʼ ஸூதே .. 8..
(பதப்பிரிவு : த⁴வ + இதி)
விளக்கம்:
(அவள்) நினைக்கிறாள், மகிழ்கிறாள், பார்க்கிறாள், மயங்குகிறாள், பாடுகிறாள் , படுக்கிறாள். பெருமூச்சு விடுகிறாள், வேர்க்கிறாள். திடீரென்று “என் கணவா” என்று சொல்கிறாள், கண்ணீர் விடுகிறாள்.
விஶ்வநாத²-கவி-பா⁴ஷித-மித³மபி கு³ஹபர-தர-கமனீயம் .
கு³ஹ-விரஹார்தி³த-வனசர-து³ஹித்ருʼ-ஸகீ²-வச ஆத³ரணீயம் .. 9..
(பதப்பிரிவு : பா⁴ஷிதம் + இத³ம் + அபி, விரஹ + அர்தி³த)
விளக்கம்:
விசுவநாத கவியின் கூற்றான இதுவும் மிகவும் குஹனைப்பற்றியே இருப்பதால் அழகானது. முருகனைபிரிந்து வருந்தும் வேடர்மகளின் தோழியின் பேச்சு ஆதரவு செய்யத்தக்கது.
Comments
Post a Comment