அஷ்டபதீ³ - 12 - மூலமும் பொருளும்
சுலோகம் 1:
அத² குச-ஜக⁴ன-மஹிம்னா தே³ஹ-தனிம்னா ஸகீ² ஸஹாயா தாம் .
ஸ்க²லித-பதா³ம்ʼ பதி² வல்லீம்ʼ நிவேஶ்ய மல்லீ-க்³ருʼஹே கு³ஹம்ʼ ப்ராஹ ..
(பதப்பிரிவு தேவையில்லை)
விளக்கமும் குறிப்புகளும் :
பிறகு (வள்ளியை அழைத்துக்கொண்டுச் சென்று), தனபாரத்தின் காரணமாகவும், உடல் மெலிவாலும், (மேலும் நடக்க முடியாமல்) கால்கள் தடுமாறும் வள்ளியை, அவளுக்கு துணையான தோழி , வழியிலேயே ஒரு மல்லிகைக்கொடிவீட்டில் அமர்த்திவிட்டு, தான் சென்று முருகனிடம் (இவ்வாறு) சொன்னாள்.
இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள் கொண்டது.
—----------------------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதீ³ - 12 (ஶங்கராப⁴ரண ராக³ம், சாபு தாளம்)
இச்ச²தி தவ பரிரம்ப⁴ண-மேஷா .
விரஹ-மஹாக³த³-க்ருʼத-தனு-ஶோஷா .. 1..
(பதப்பிரிவு : பரிரம்ப⁴ணம் + ஏஷா)
விளக்கம்:
இவள் உங்கள் ஆலிங்கனத்தை விரும்புகிறாள். விரகம் என்ற பெரிய நோயால் உடல் வற்றியுள்ளாள்.
பல்லவீ
லோகபதே ஸர்வ-லோகபதே .
ஶ்ராம்யதி வல்லீ குஞ்ஜ-க்³ருʼஹே ..
விளக்கம்:
அனைத்து உலகங்களுக்கும் தலைவனே! அங்கு மல்லிகைக்கொடிவீட்டில் வள்ளி களைத்து வாடுகிறாள்.
ஜபதி ஸததமபி ப⁴வத³பி⁴தா⁴னம் .
விகிரதி நயனஜ-ஜலமதிமானம் .. 2..
(பதப்பிரிவு : ப⁴வத்³ + அபி⁴தா⁴னம், ஜலம் + அதிமானம்)
விளக்கம்:
எப்போதும் தங்கள் பெயரையே ஜபித்துக்கொண்டிருக்கிறாள். அதிகமாக கண்ணீர் சிந்துகிறாள்.
மனஸிஜ-கல்பித-மத்ரப⁴வந்தம் .
பஶ்யதி ஸகல-தி³ஶாஸு வஸந்தம் .. 3..
(பதப்பிரிவு : கல்பிதம் + அத்ரப⁴வந்தம்)
விளக்கம்:
ஆசையால் கற்பனைசெய்யப்பட்ட தங்களை எல்லா திக்குகளிலும் இருப்பவராக காண்கிறாள்.
கத²-மபி⁴ஸரதி ந தத³னு வயஸ்யே .
ஶரவண-ப⁴வ இதி வத³தி ரஹஸ்யே .. 4..
(பதப்பிரிவு : கத²ம் + அபி⁴ஸரதி)
விளக்கம்:
“தோழி ! சரவணபவன் பிறகு ஏன் இன்னும் புறப்பட்டு வரவில்லை ? “ என்று தனிமையில் (தோழியிடம்) கேட்கிறாள்.
க²க³-க³தி-ஶங்கித-ப⁴வத³பி⁴-க³மனா .
பரிஹித-ஶிதி²லித-க்ருʼஶ-கடி-வஸனா .. 5..
(பதப்பிரிவு : ப⁴வத்³ அபி⁴-க³மனா)
விளக்கம்:
பறவை பறந்தாலும் தங்கள் வரவென்று ஐயுற்று எதிர்பார்க்கிறாள். இடை மெலிந்து, கட்டிய ஆடை தளரும்படி திகழ்கிறாள்.
பேஶல-கிஸலய-க்ருʼத-கர-வலயா .
ஶ்வஸிதி ப⁴வதி விரசித-ஹ்ருʼத³ய-லயா .. 6..
விளக்கம் :
மென்மையான தளிர்களை கையில் வளையாக அணிகிறாள். தங்களிடம் இதயம் லயித்தவளாக உயிர்க்கிறாள்.
ப⁴வத³பி⁴ஸரணாமித-ரஸ-லக்³னா .
பதி³ பதி³ நிபததி வலத³வலக்³னா .. 7..
(பதப்பிரிவு : ப⁴வத்³ + அபி⁴ஸரண + அமித , வலத்³ அவலக்³னா)
விளக்கம் :
தங்களை நாடி வருவதில் எல்லையற்ற ஆர்வம் கொண்டவள், (ஆனால் )அடிக்கு அடி, இடைவளைந்து விழுகிறாள்.
முஹ்யதி கரதல-ஶயித-கபோலா .
ஸ்னிஹ்யதி ஹ்ருʼஷ்யதி வனசர-பா³லா .. 8..
விளக்கம் :
கைத்தலத்தில் சாய்த்த கன்னம் உடையவளாக மயங்குகிறாள். அன்புநிறைந்து களிக்கிறாள் அவ்வேடர்சிறுமி.
விஶ்வநாத²-கவி-கி³ர-மனுவாரம் .
பட²த நமத ஶஶி-மகுட-குமாரம் .. 9..
(பதப்பிரிவு : கி³ரம் + அனுவாரம்)
விளக்கம் :
விசுவநாத கவியின் சொற்களை மீண்டும் மீண்டும் படியுங்கள். பிறைசூடியின் குமாரனான முருகனை மீண்டும் மீண்டும் வணங்குங்கள்.
—----------------------------------------------------------------------------------------------------------------------------
சுலோகம் 2:
அலமதி⁴க-விலம்பே³நாபி⁴ஸர்தும்ʼ யதேதா²꞉
ஸப²லய தவ சேதோ-வல்லபா⁴யா அபீ⁴ஷ்டம் |
விரஹ-விகல-பாதா³ ஸா(அ)பி⁴ஸாரேப்யஶக்தா
வஸதி விரசயந்தீ பா³ஷ்ப-ஸார்த்³ரம்ʼ நிகுஞ்ஜம் ||
சுலோகம் 2: பதம்பிரித்து
அலம்ʼ அதி⁴க-விலம்பே³ன அபி⁴ஸர்தும்ʼ யதேதா²꞉
ஸப²லய தவ சேதோ-வல்லபா⁴யா அபீ⁴ஷ்டம் .
விரஹ-விகல-பாதா³ ஸா அபி⁴ஸாரே அபி அஶக்தா
வஸதி விரசயந்தீ பா³ஷ்ப-ஸார்த்³ரம்ʼ நிகுஞ்ஜம் .
விளக்கமும் குறிப்புகளும் :
நேரம் கடத்தியது போதும். புறப்பட்டு வர யத்தனை செய்யுங்கள். உங்கள் மனத்திற்கினியவளின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். விரகத்தால் செயலற்ற கால்களை உடைய அவள் (தானே) தேடிவர சக்தியற்றவள். தன் கண்ணீரால் கொடிவீட்டையே ஈரமாக்கி அங்கு வசிக்கிறாள்.
இது மாலினீ - வரிக்கு 15 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
சுலோகம் 3:
ஆக³ச்சே²ன்-மம சித்தப³ந்து⁴ரசிரா-தா³னந்த³யேன்-நிர்ப⁴ரம்ʼ
க்ருʼத்வா(ஆ)ஶ்லேஷ-மதா²த⁴ரம்ʼ நனு பிபே³த்³ரோமாஞ்சயேத்³-விக்³ரஹம் |
இத்யாகல்பித-கல்பனா-ஶத-பதே² நி꞉ஶங்க-க³ச்ச²ன்-மதிம்ʼ
தாம்ʼ பா³லாம்ʼ பரிபாலயே꞉ கருணயா தீ³னானுகம்பின் ப்ரபோ⁴ ||
சுலோகம் 3: பதம்பிரித்து
ஆக³ச்சே²த் மம சித்தப³ந்து⁴꞉ அசிராத்³ ஆனந்த³யேத் நிர்ப⁴ரம்
க்ருʼத்வா ஆஶ்லேஷம்ʼ அதா²த⁴ரம்ʼ நனு பிபே³த்³ ரோமாஞ்சயேத்³-விக்³ரஹம் .
இதி ஆகல்பித-கல்பனா-ஶத-பதே² நி꞉ஶங்க-க³ச்ச²ன்-மதிம்ʼ
தாம்ʼ பா³லாம்ʼ பரிபாலயே꞉ கருணயா தீ³னானுகம்பின் ப்ரபோ⁴ .
விளக்கமும் குறிப்புகளும் :
எளியவர்க்கு இரங்கும் பிரபுவே ! “என் மனதிற்கினிய தோழர் விரைவில் வருவார். மிகுதியான ஆனந்தத்தைத் தருவார். அணைத்துக்கொண்டு இதழைப் பருகுவார். மெய்சிலிர்க்க வைப்பார்.” இவ்வாறு செய்த நூறு கற்பனைகளின் வீதியில் சந்தேகமற்றுச் செல்லும் மனத்தினளான அந்த சிறுபெண்ணை காக்கவேண்டும்!
இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
சுலோகம் 4:
ஈப்ஸந்தீ ப⁴வதா³க³மம்ʼ மம ஸகீ² ஸஜ்ஜீ-கரோத்யஞ்ஜஸா
ஶய்யாம்ʼ ஸூனமயீம்ʼ வ்யபோஹதி ரஜோ வஸ்த்ராஞ்சலேன க்ஷணாத் |
ஆகல்பம்ʼ குருதே நவம்ʼ நவமபீத்யுக்திம்ʼ நிஶம்யாத³ராத்
த⁴ன்யோ மோத³-யுதோ(அ)ஸ்து மே ஸபதி³ ஸுப்³ரஹ்மண்ய ஆனந்த³த³꞉ ||
சுலோகம் 4: பதம்பிரித்து
ஈப்ஸந்தீ ப⁴வத்³ ஆக³மம்ʼ மம ஸகீ² ஸஜ்ஜீ-கரோதி அஞ்ஜஸா
ஶய்யாம்ʼ ஸூனமயீம்ʼ வ்யபோஹதி ரஜோ வஸ்த்ராஞ்சலேன க்ஷணாத் .
ஆகல்பம்ʼ குருதே நவம்ʼ நவம்ʼ அபி இதி உக்திம்ʼ நிஶம்ய ஆத³ராத்
த⁴ன்யோ மோத³-யுதோ அஸ்து மே ஸபதி³ ஸுப்³ரஹ்மண்ய ஆனந்த³த³꞉
விளக்கமும் குறிப்புகளும் :
“என் தோழி உங்கள் வரவை வேண்டுகிறாள். பூக்களாலான விரிப்பை செய்து, ஆடைத்தலைப்பால் ஒவ்வொரு கணமும் தூசினைத் துடைக்கிறாள். புதிய புதிய அலங்காரங்களைச் செய்துகொள்கிறாள்” என்ற வார்த்தையைக்கேட்டு (வள்ளியிடம் கொண்ட) அன்பினால் ஆனந்தமடைந்த பாக்யசாலியான ஸுப்ரமணியன், எனக்கு இப்போது மகிழ்வைத் தரட்டும்.
இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
இதி ஶ்ரீ-விஶ்வநாத²-க்ருʼதௌ கீ³த-கா³ங்கே³ய-காவ்யே வாஸக-ஸஜ்ஜிகா-வர்ணனே த⁴ன்ய-ஸுப்³ரஹ்மண்யோ நாம ஷஷ்ட²꞉ ஸர்க³꞉ .
(இதுவே விசுவநாத கவியின் படைப்பாகிய கீத காங்கேய காவியத்தில், “பாக்யசாலி ஸுப்ரமண்யன்” என்ற ஆறாம் சர்கம்)
Comments
Post a Comment