அஷ்டபதீ³ - 13 - மூலமும் பொருளும்
சந்திரோதயம் |
சுலோகம் 1:
சந்த்³ரஸ்தமோ(அ)ச்ச²தனு-ராஶு கரைர்னிபீதம்ʼ
குக்ஷௌ கலங்க-கபடேன வஹம்ʼஸ்ததா³னீம் |
கே²தா³னலம்ʼ விரஹிணாமபி மார-ஸாஹ்யாத்
ஸம்ʼவர்த⁴யன் ஜலதி⁴னா ஸமமாவிராஸீத் ||
சுலோகம் 1 - பதம்பிரித்து:
சந்த்³ர꞉ தமோ அச்ச²தனு꞉ ஆஶு கரை: நிபீதம்ʼ
குக்ஷௌ கலங்க-கபடேன வஹன் ததா³னீம் .
கே²த³ அனலம்ʼ விரஹிணாம்ʼ அபி மார-ஸாஹ்யாத்
ஸம்ʼவர்த⁴யன் ஜலதி⁴னா ஸமம்ʼ ஆவிராஸீத் .
விளக்கமும் குறிப்புகளும் :
அப்போது, வெண்மை வடிவான சந்திரன், விரைவாக, தன் (கிரணங்கள் என்ற) கைகளால் இருளைப்பருகி, தன் வயிற்றில் களங்கம் என்ற பெயரில் சுமந்துகொண்டு, காமதேவனின் தோழன் என்பதால், கடலோடு சேர்த்து, பிரிவடைந்தவர்களின் துயரத்தீயையும் பொங்கச் செய்துகொண்டு, தோன்றினான்.
இது வஸந்ததிலகம் - வரிக்கு 14 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
சுலோகம் 2:
உத³யதி குவலய-ப³ந்தௌ⁴ மானஸ-ப³ந்தௌ⁴ ச நாக³தே வல்லீ |
முஞ்சந்த்யவிரத-மஸ்ரம்ʼ வ்யலபத³ஜஸ்ரம்ʼ விமுக்த-கண்ட²ம்ʼ ஸா ||
சுலோகம் 2 - பதம்பிரித்து:
உத³யதி குவலய-ப³ந்தௌ⁴ மானஸ-ப³ந்தௌ⁴ ச ந ஆக³தே வல்லீ .
முஞ்சந்தீ அவிரதம்ʼ அஸ்ரம்ʼ வ்யலபத்³ அஜஸ்ரம்ʼ விமுக்த-கண்ட²ம்ʼ ஸா
விளக்கமும் குறிப்புகளும் :
குவளைமலர்களின் தோழனான சந்திரன் உதித்தவுடன், தன் மனதிற்கினிய தோழர் வராததால், வள்ளி ஓயாது கண்ணீர் உகுத்து, வாய்விட்டு இடையறாமல் அரற்றினாள்.
இது “ஆர்யா” என்ற சந்தத்தில் உள்ளது. ஒவ்வொரு வரியிலும் (12+18) 30 மாத்திரைகள் கொண்டது.
—-----------------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதீ³ 13 (ஆஹிரீ ராக³ம் , ஜ²ம்ப தாளம்)
ஜ²டிதி கு³ஹ ஆக³மன-ஶபத²-ஶத-பா⁴ஷணம் .
விதத²யதி விப²லயதி மாமக-விபூ⁴ஷணம் .. 1..
விளக்கம்:
விரைவில் வருவேன் என்று நூறு சபதம் செய்து குகன் பேசியது பொய்யாகிவிட்டது. என் அலங்காரம் வீணாகி விட்டது.
பல்லவீ
கிம்ʼ ப்³ருவே விஷம-விரஹம்ʼ ஸஹே கத²மதி-விலோபி⁴தா ..
விஷமகு³ண-விஷமஶர-யோத⁴பதி-கே²டகே .
ப⁴வதி ஶஶ-ப்⁴ருʼதி க இஹ ஶரண-மவஸாத³கே .. 2..
(பதப்பிரிவு : கத²ம் + அதி ஶரணம் + அவஸாத³கே)
விளக்கம்:
என்ன சொல்வேன் ? மிகவும் ஏமாற்றமடைந்த நான், எப்படி கொடிய விரகத்தை சகிப்பேன்? துஷ்டகுணமுள்ள மன்மதனின் சேனாதிபதியின் கேடயம் போல விளங்கும் சந்திரன் துயரச்செய்ய, யார் எனக்கு கதி ?
குலஜ-ம்ருʼக³த்³ருʼ-க³னுசித-மபி⁴ஸரண-மாஶ்ரயம் .
அனுப⁴வதி ததி³ஹ மம ஹ்ருʼத³-தனு-ஶராமயம் .. 3..
(பதப்பிரிவு : ம்ருʼக³த்³ருʼக்³ + அனுசிதம் + அபி⁴ஸரணம் + ஆஶ்ரயம், தத் + இஹ, ஹ்ருʼத்³ + அதனு)
விளக்கம்:
நல்ல குலத்தில் தோன்றிய மான்விழியாளான பெண்ணுக்கு உசிதமல்லாத “காதல் கொண்டவனைத் தேடி வருதல்” என்பதையே வழியாக ஏற்றேன். அதன்பயனாக, என் இதயமோ, இங்கு காமதேவனின் அம்புகளால் வருத்தம் அனுபவிக்கிறது.
(அதனு - உடலற்றவனான காமதேவன்)
லலித-ஸும-ஶயனமபி மம கர-தலாஸ்த்ருʼதம் .
விரசயதி மனஸிஜ-விஷாத³-மதி-விஸ்த்ருʼதம் .. 4..
(பதப்பிரிவு : ஶயனம் + அபி, கரதல + ஆஸ்த்ருʼதம், விஷாத³ம் + அதி)
விளக்கம்:
என் கைத்தலத்தால் விரிக்கப்பட்ட அழகான மலர் சயனம், மிக விஸ்தாரமான காதல்துயரத்தைச் செய்கிறது.
ரஹஸி மம குஞ்ஜ-க்³ருʼஹ-வஸதி-ரிஹ மாமிகா .
ப்ரியதம-பராங்முக²தயா த³லித-கௌதுகா .. 5..
(பதப்பிரிவு : வஸதி: + இஹ)
விளக்கம்:
இங்கு கொடிவீட்டில் தனிமையில் எனது வாசமானது, மிகப்பிரியமானவரின் அலட்சியத்தால், ஆர்வம் சிதைந்து திகழ்கிறது.
ஆயத-நிநாத³-கர-கோக-யுவதீ த்வியம் .
அனுனயதி மாமிவ ஸகீ² ஸகருணோத³யம் .. 6..
(பதப்பிரிவு : து + இயம், மாம் + இவ)
விளக்கம்:
நீண்ட குரல் எழுப்பும் இந்த சக்ரவாகப் பேடு, கருணை உதித்தவளான தோழிபோல என்னை சமாதானப்படுத்துகிறது போலும்.
மதி³தரோத்பலினீவ துஷ்யதி ஸ்வாமினா .. 7..
(பதப்பிரிவு : கமலினீ + இவ + அது⁴னா, மத்³ + இதரா + உ த்பலினீ + இவ)
விளக்கம்:
ஐயகோ! தாமரைக்கொடி போல (நான்) இப்போது (இரவில்) மிகவும் வாடுகிறேன். வேறொருத்தி, அல்லிக்கொடி போல, சுவாமியுடன் மகிழ்கிறாள்.
அத³யமிஹ யதி³ ஸ இதி ப⁴ஜதி ரஸ-ப⁴ஞ்ஜனம் .
ப்ரத²மமதி தேன கிமு கலித-மனுரஞ்ஜனம் .. 8..
(பதப்பிரிவு : அத³யம் + இஹ, ப்ரத²மம் + அதி, கலிதம் + அனுரஞ்ஜனம்)
விளக்கம்:
தயையற்றவராக அவர் இவ்வாறு ஆர்வம் இழந்த நிலை அடைவாராகில், முதலில் ஏன் அவரால் மிகவும் அன்புபாராட்டப்பட்டது ?
கவி-விஶ்வநாத²-கலிதேய-மதி-கோமலா .
மோத³யது ரஸிகமிஹ க்ருʼதிரமித-மங்க³ளா .. 9..
(பதப்பிரிவு : கலிதா + இயம் + அதி, ரஸிகம் + இஹ, க்ருʼதி: + அமித)
விளக்கம்:
விசுவநாத கவி இயற்றிய மிகக்கோமளமான இக்கிருதி, எல்லையற்ற மங்களம் நிறைந்ததாக ரசிகரை மகிழ்விக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------------------சுலோகம் 3:
தத் கிம்ʼ ஸ்வீய-ஜனாவ்ருʼத꞉ கிமு ஸகீ² நாவைக்ஷத ஸ்வாமினம்ʼ
கிம்ʼ பாதா³ம்பு³ஜ-ஸக்த-ப⁴க்த-ஜனதாபீ⁴ஷ்ட-ப்ரதா³னே ரத꞉ |
கிம்ʼ வா பா⁴க்³யஜுஷா ரஹ꞉ ஸுவபுஷா ஜுஷ்டோ(அ)ன்யயா யோஷயா
மாமன்விஷ்ய சரத்யயம்ʼ கிமு வனே குஞ்ஜம்ʼ ஸ யந்நாக³த꞉ ||
சுலோகம் 3 - பதம்பிரித்து:
தத் கிம்ʼ ஸ்வீய-ஜன ஆவ்ருʼத꞉ ? கிமு ஸகீ² ந அவைக்ஷத ஸ்வாமினம் ?
கிம்ʼ பாதா³ம்பு³ஜ-ஸக்த-ப⁴க்த-ஜனதா அபீ⁴ஷ்ட-ப்ரதா³னே ரத꞉ ? .
கிம்ʼ வா பா⁴க்³யஜுஷா ரஹ꞉ ஸுவபுஷா ஜுஷ்டோ அன்யயா யோஷயா ?
மாம்ʼ அன்விஷ்ய சரதி அயம்ʼ கிமு வனே ? குஞ்ஜம்ʼ ஸ யத் ந ஆக³த꞉
விளக்கமும் குறிப்புகளும் :
அவர் இன்னும் கொடிவீட்டுக்கு வரவில்லையே! ஏனென்றால், தன் உறவினர்களால் சூழப்பட்டு இருக்கிறாரா? தோழி சுவாமியைப் பார்க்கவில்லையா ? திருவடித்தாமரையில் பற்றுவைத்த பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றித் தருவதில் ஈடுபட்டுள்ளாரா? பாக்கியசாலியான அழகிய மேனிபடைத்த வேறொரு பெண்ணுடன் தனிமையில் உள்ளாரா? காட்டில் என்னைத் தேடித் திரிகிறாரா?
இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
Comments
Post a Comment