அஷ்டபதீ³ - 14 - மூலமும் பொருளும்
வள்ளிமலையில் பொங்கியம்மை (வள்ளி) |
சுலோகம் 1:
க³தாம்ʼ கு³ஹாப்⁴யர்ண-முபாக³தாம்ʼ தாம்ʼ
ஸகீ²-மத² ப்ராண-த⁴வாத்³ருʼதே ஸா |
த்³ருʼஷ்ட்வா விஷண்ணாம்ʼ பரிஶங்க்ய தே³வம்ʼ
ஸக்தம்ʼ கயாசித்³-விரஹிண்யதா²(ஆ)ஹ ||
சுலோகம் 1 - பதம்பிரித்து:
க³தாம்ʼ கு³ஹ அப்⁴யர்ணம்ʼ உபாக³தாம்ʼ தாம்ʼ
ஸகீ²ம்ʼ அத² ப்ராண-த⁴வாத்³ ருʼதே ஸா .
த்³ருʼஷ்ட்வா விஷண்ணாம்ʼ பரிஶங்க்ய தே³வம்ʼ
ஸக்தம்ʼ கயாசித்³ விரஹிணீ அத² ஆஹ .
விளக்கமும் குறிப்புகளும் :
பிறகு, குகனருகில் சென்று, தன் பிராணநாதனின்றி (தனியே) வருத்தமுற்று திரும்பிவந்த சகியைப் பார்த்து, வேறொருத்தியிடம் பற்றுக்கொண்டவனாக தேவனை சந்தேகித்து, பிரிவுத்துயரில் இருந்த வள்ளி (பின்வருமாறு) கூறினாள்.
இது உபஜாதி - வரிக்கு 11 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
—-------------------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதீ³ 14 (ஸாரங்க³ ராக³ம், சாபு தாளம்)
ம்ருʼக³-மத³-பி³ந்து³-பரிஷ்க்ருʼத-பா²லா .
கச-த்⁴ருʼத-விகஸித-விசகில-மாலா .. 1..
விளக்கம்
கஸ்துரிப்பொட்டு அலங்கரிக்கும் நெற்றியுள்ளவள், மலர்ந்த மல்லிகைசரத்தை கூந்தலில் தரித்தவள்.
பல்லவீ
கா(அ)பி கி³ரிஶ-பு⁴வா. விஹரதி நலின-த்³ருʼக³பி⁴னவா ..
(பதப்பிரிவு : நலின-த்³ருʼக்³ + அபி⁴னவா)
விளக்கம்
தாமரைக்கண்ணியான யாரோ ஒரு புதியவள், சிவகுமாரனுடன் களிக்கிறாள்.
பதி-விலிகி²த-மகரிக-குச-கலஶா .
சபல-கலேப³ர-சல-வஸன-த³ஶா .. 2..
விளக்கம்
குடம் போன்ற தனங்களில், கணவனால் (கஸ்துரி, கோரோசனை முதலியன கொண்டு) எழுதப்பட்ட மகரம் போன்ற சித்திரங்களை தாங்கியவள். அசையும் உடலில் அசையும் ஆடையோரங்கள் கொண்டவள்.
ஶ்ரமஜல-லேஶ-கரம்பி³த-வத³னா .
த⁴வ-ம்ருʼது³-பாணிஜ-ஶிதி²லித-ரஶனா .. 3..
விளக்கம்
வியர்வைத்துளிகள் விரவிய முகத்தை உடையவள். கணவனின் மென்மையான நகங்களால் தளர்த்தப்பட்ட மேகலையுடையவள்.
ஸத்ரப-முகுலித-நயன-குவலயா .
ஸரப⁴ஸ-சஞ்சல-கரமணி-வலயா .. 4..
விளக்கம்
வெட்கத்தால் அரும்புபோல் மூடிய குவளைக்கண்களை உடையவள். வேகமாக அசையும் ரத்தினம்பதித்த வளையலணிந்த கரத்தினள்.
கு³ஹ-பரிரம்ப⁴-ஸபுலக-ஶரீரா .
குஸும-ஶராஸன-விக்³ரஹ-தீ⁴ரா .. 5..
விளக்கம்
குகனின் அரவணைப்பில் சிலிர்த்த மேனியுடையவள். மலர்க்கணையோனின் போரில் (அஞ்சாத) தீரம் மிகுந்தவள்.
விக³லித-குந்தல-ஸுமப்⁴ருʼத-மஞ்சா .
ஸப²லித-ஸ்ருʼஷ்டி-விதா⁴யி-விரிஞ்சா .. 6..
விளக்கம்
கூந்தலிலிருந்து நழுவிய மலர்கள் நிறைந்த மஞ்சத்தை உடையவள். தன்னைப் படைத்த பயனை பிரமனுக்கு தந்தவள்.
ஶீத்க்ருʼதி-கர-ரத³னபட-யுக³-த⁴ரா .
த³ரஹஸ-ஸூசித-நிஜ-ஸுக²-விஸரா .. 7..
விளக்கம்
(மகிழ்ச்சியால்) மூச்சை உள்ளிழுக்கும் இரு இதழ்களைத் தாங்கியவள். சிறிய புன்னகை மூலமாக தன் இன்பப்பெருக்கை சூசனை செய்பவள்.
மணித-ரணித-பரிபோஷித-மாரா .
கலகல-ரவ-ரஶன-ஜக⁴ன-பா⁴ரா .. 8..
விளக்கம்
காதலுக்குரிய இனிய ஓசைகளால் காமதேவனுக்கு புஷ்டியைத் தருபவள். கலகல என்று ஒலிக்கும் மேகலை விளக்கும் பாரமான இடுப்பை உடையவள்.
விஶ்வநாத²-கவி-ப⁴ணித-மவிரதம் .
கு³ஹ-ரஸிகம்ʼ கலயது ஸுக²-ப⁴ரிதம் .. 9..
(பதப்பிரிவு : ப⁴ணிதம் + அவிரதம்)
விளக்கம்
விசுவநாத கவி சொல்லிய இப்பாட்டு, எப்போதும் முருகபக்தர்களை ஆனந்தம் நிறைந்தவர்களாக வைக்கட்டும்.
சுலோகம் 2:
குமுத³-ப³ந்து⁴ர-ப³ந்து⁴ரஹோ மம ஸ்வ-மஹஸா மஹ-ஸாத⁴ன-பண்டி³த꞉ |
குஸும-மார்க³ண-மார்க³ணவத் கரானலக⁴யன் லக⁴யன் மன ஏத⁴தே ||
சுலோகம் 2 - பதம்பிரித்து:
குமுத³-ப³ந்து⁴ர-ப³ந்து⁴: அஹோ மம ஸ்வ-மஹஸா மஹ-ஸாத⁴ன-பண்டி³த꞉ .
குஸும-மார்க³ண-மார்க³ணவத் கரான் அலக⁴யன் லக⁴யன் மன ஏத⁴தே .
விளக்கமும் குறிப்புகளும் :
அல்லியின் அழகிய நண்பனான சந்திரன், தன்னொளியால் பெரிய செயல்களை சாதிப்பதில் பண்டிதன். மலர்க்கணையோனின் கணைபோன்ற கிரணங்களை விடாமல் பெருக்கி, என் மனத்தை வலுவற்றதாக செய்து வளர்கிறான்.
இது த்³ருத-விலம்பி³தம் - வரிக்கு 12 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
Comments
Post a Comment