அஷ்டபதீ³ - 20 - மூலமும் பொருளும்
சுவாமிமலையில் வள்ளிகல்யாண விழாவில் வள்ளி |
சுலோகம் 1:
அத² ஶரவண-ஜாதே ஸாந்த்வயித்வா(ஆ)த்மப³ந்து⁴ம்ʼ
க³தவதி ரதி-ஸஜ்ஜே ரம்ய-குஞ்ஜம்ʼ ரஹஸ்யம் |
ரசித-விவித⁴-பூ⁴ஷாம்ʼ வல்லிகாம்ʼ காசிதா³லீ
ஸதி ரஜனி-முகே² தாம்ʼ ஸாத³ரம்ʼ ப்ராஹ வாணீம் ||
சுலோகம் 1 - பதம்பிரித்து:
அத² ஶரவண-ஜாதே ஸாந்த்வயித்வா ஆத்மப³ந்து⁴ம்ʼ
க³தவதி ரதி-ஸஜ்ஜே ரம்ய-குஞ்ஜம் ரஹஸ்யம் .
ரசித-விவித⁴-பூ⁴ஷாம்ʼ வல்லிகாம்ʼ காசித்³ ஆலீ
ஸதி ரஜனி-முகே² தாம்ʼ ஸாத³ரம்ʼ ப்ராஹ வாணீம்
விளக்கமும் குறிப்புகளும் :
பிறகு, சரவணத்தில் தோன்றியவன், தன் உயிர்தோழியை சமாதானப்படுத்திவிட்டு, போகத்துக்குரிய அலங்காரங்களைச் செய்துகொண்டு, தனிமையான அழகிய கொடிவீட்டுக்குச் சென்றவுடன், பலவித அலங்காரங்கள் செய்யப்பட்ட வள்ளியிடம் ஒரு தோழி, இரவு தொடங்கும் சமயத்தில், ஆதரவுடன் இந்த மொழிகளைக் கூறினாள்.
இது மாலினீ - வரிக்கு 15 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
—-------------------------------------------------------------------------------------------------------------------
அஷ்டபதீ³ - 20 (கல்யாணீ ராக³ம், சாபு தாளம்)
அதிம்ருʼது³-பல்லவ-ஶயன-யுதம்ʼ ஶ்ரித-வஞ்ஜுல-மூல-விபா⁴க³ம் .
கோமல-குஞ்ஜக்³ருʼஹம்ʼ ப⁴வதீம்ʼ ப்ரதிபால்ய க³த-மதுல-ராக³ம் .. 1..
(பதப்பிரிவு : க³தம் + அதுல)
விளக்கம்
மிக மிருதுவான தளிர்களின் மஞ்சத்தில், அசோகமரத்தின் அடியில், மென்மையான கொடிவீட்டில் , உன்னை எதிர்பார்த்துகே காத்திருப்பவர், (உன்மேல்) இணையற்ற காதல் கொண்டவர்.
பல்லவீ
ரம்யே ஶிவதனுஜம்ʼ வல்லி . உபக³த-முபசர வல்லி ..
(பதப்பிரிவு : உபக³தம் + உபசர)
விளக்கம்:
அழகியே ! வள்ளி ! அங்கு சென்றிருக்கும் சிவகுமாரனிடம் சென்று அவருக்கு உபசாரங்கள் செய் !
சலித-த³லை-ரப்யபி⁴ஸ்ருʼதி-குஞ்ஜ உபாஹ்வயதீவ ஸராக³ம் .
அலி-நினதை³-ரபி⁴ஸர கு³ருஜக⁴னே மாமவலம்ப்³ய ஸவேக³ம் .. 2..
(பதப்பிரிவு : த³லை: +அபி + அபி⁴ஸ்ருʼதி, உபாஹ்வயதி + இவ, நினதை³: + அபி⁴ஸர, மாம் + அவலம்ப்³ய)
விளக்கம்:
அசையும் இலைகளிலும், வண்டுகளின் ரீங்காரத்தாலும், (நீ) அடைய வேண்டிய கொடிவீடானது, ஆர்வத்தோடு உன்னை வரவேற்கிறது ! பாரமான இடுப்பினை உடையவளே! என்னை பிடித்துக்கொண்டு வேகமாக செல்.
ப⁴வத³பி⁴ஸரண-விபோ³தி⁴கயா ஸகி² பிக-க³ண-நாத³-விதீ³ர்ணம் .
ஹம்ʼஸக-கலகல-ரவ-ஸுத⁴யா பரிபூரய நாயக-கர்ணம் .. 3..
(பதப்பிரிவு : ப⁴வத்³ + அபி⁴ஸரண)
விளக்கம்:
தோழி ! குயில் கூட்டங்களின் இசையோடு கலந்த, நீ நெருங்குவதை அறிவிக்கும் சிலம்புகளின் கலகல ஓசையமுதத்தால், உன் நாயகனின் காதுகளை நிரப்பு.
ஶரவண-ஜனுஷே ஸகி² விநிவேத³ய மலய-ஸமீர-கிஶோரம் .
ப⁴வதி நிகடகே ஸுக²யதி மாமிதி ஸானுப⁴வம்ʼ ஸுக²-பூரம் .. 4..
(பதப்பிரிவு : மாம் + இதி)
விளக்கம்:
தோழி ! “தாங்கள் அருகிருக்க, பொதிகையின் இளங்காற்று, இன்பவெள்ளமாக எனக்கு சுகமளிக்கிறது” என்று சரவணபவனிடம் அனுபவபூர்வமாக தெரிவி.
தவ கலநாத³-ஸஹோத³ர-கலக³ல-மது⁴ர-நிநாத³ உதா³ரே
ஜனயது மோத³முபாக³த-மன்மத²-காஹல-ரவவ-த³தூ³ரே .. 5..
(பதப்பிரிவு : மோத³ம் + உபாக³த, ரவவத்³ + அதூ³ரே)
விளக்கம்:
பெருந்தன்மை கொண்ட அழகியே! உனது குரலுக்கு சமமான குயில்களின் இசை, வருகைதந்த காமதேவனின் முரசொலி போல, (அவருக்கு) களிப்பை உண்டாக்கட்டும்.
ரதி-கலஹே ஜய பதி-மபராதி⁴ன-மதி⁴க-ஸுகே²ன பு⁴ஜாப்⁴யாம் .
ப³ந்த⁴ன-மலகு⁴ விதா⁴ய நிபீட்³ய ச கல்ப-லதா-ஸத்³ருʼஶாப்⁴யாம் .. 6..
(பதப்பிரிவு : பதிம் + அபராதி⁴னம் + அதி⁴க, ப³ந்த⁴னம் + அலகு⁴)
விளக்கம்:
கற்பகக்கொடி போன்ற இரு கைககளால் அவரை கெட்டியாகக் கட்டி, இறுக்கி, (உன்னைக் காக்கவைத்து) தவறிழைத்தவரான உன் கணவனை, இன்பப்போரில் மிகச்சுலபமாக வெற்றிகொள்.
குச-கும்ப⁴-யுக³ம்ʼ ரய-க³தி-விக்⁴ன-மிஹாசரதி ப்ரஸப⁴ம்ʼ தே .
தத³னுப⁴வது த்³ருʼட⁴-நிஶித-நகா²ங்குஶ-முக²-த³லனம்ʼ தவ காந்தே .. 7..
(பதப்பிரிவு : விக்⁴னம் + இஹ + ஆசரதி, தத்³ + அனுப⁴வது)
விளக்கம்:
வேகமாக செல்வதற்கு மிகவும் தடையாக உன் குடம்போன்ற இருதனங்கள் உள்ளன. அதற்கு பலனாக, திடமும் கூர்மையும் கொண்ட நகங்கள் என்ற அங்குசத்தின் முனையால் கீறப்படுவதை (தண்டனைப்போல ) அவை அனுபவிக்கட்டும்.
அத⁴ர-ரஸம்ʼ பரிபாயய நாத²ம்ʼ திரய ஸுதா⁴-ரஸ-சிந்தாம் .
அனுனய-சாடு-ஶதேன வயஸ்யே விஸ்ருʼஜ ஸுதூ³ர-மஹந்தாம் .. 8..
(பதப்பிரிவு : ஸுதூ³ரம் + அஹந்தாம்)
விளக்கம்:
தோழி ! அமுதத்தையும் அவர் நினைக்காத வண்ணம், உன் நாதனை இதழ்ச்சுவை பருகச்செய். பலநூறு இன்பவார்த்தைகளால் அவர் மனதை வெல். அகந்தையை வெகுதூரம் விட்டுவிடு.
விஶ்வநாத²-கவி-ப⁴ணிதமித³ம்ʼ ஶிவப⁴வ-பத³-ப⁴க்தி-நிதா³னம் .
விலஸது விபு³த⁴-முகா²ம்பு³ருஹே சிர-மதி-மது⁴ர-ரஸ-நிதா⁴னம் .. 9..
(பதப்பிரிவு : ப⁴ணிதம் + இத³ம், சிரம் + அதி)
விளக்கம்:
விசுவநாத கவியின் சொல்லாகிய இந்தப்பாட்டு, சிவனிடம் தோன்றிய முருகனின் திருவடியில் பக்திக்குக் காரணமாகும். மிக இனிமையான சுவைக்கு இருப்பிடமான இது, வெகுகாலம், அறிவுள்ளவர்களின் முகத்தாமரையில் விளங்கட்டும்.
—--------------------------------------------------------------------------------------------------------------------------
சுலோகம் 2:
ஆக³ச்சே²த் ப்ரியநாயிகா(அ)த்³ய குஶலம்ʼ ப்ருʼச்சே²த் ப்ரயச்சே²ச்ச ஸா
கா³டா⁴லிங்க³ன-மங்க³முத்புலகதாம்ʼ க³ச்சே²தி³த³ம்ʼ மாமகம் .|
இத்த²ம்ʼ த்⁴யாயதி பஶ்யதி ப்ரலபதி ப்⁴ராம்யத்யஸௌ கா³யதி
ப்ரத்யேதி ப்ரியமேத்ய மஞ்ஜுல-வசுலோகம் 2 - பதம்பிரித்து:ச꞉-புஞ்ஜை꞉ ஸுக²ம்ʼ ப்ராபயே꞉ ||
ஆக³ச்சே²த் ப்ரியநாயிகா அத்³ய குஶலம்ʼ ப்ருʼச்சே²த் ப்ரயச்சே²த் ச ஸா
கா³ட ஆ⁴லிங்க³னம்ʼ அங்க³ம்ʼ உத்புலகதாம்ʼ க³ச்சே²த்³ இத³ம்ʼ மாமகம் .
இத்த²ம்ʼ த்⁴யாயதி பஶ்யதி ப்ரலபதி ப்⁴ராம்யதி அஸௌ கா³யதி
ப்ரத்யேதி, ப்ரியம்ʼ ஏத்ய மஞ்ஜுல-வச꞉-புஞ்ஜை꞉ ஸுக²ம்ʼ ப்ராபயே꞉
விளக்கமும் குறிப்புகளும் :
“இன்று என் பிரியநாயகி வருவாள், நலம் விசாரிப்பாள், இறுக்கமான ஆலிங்கனத்தைத் தருவாள். இந்த என்மேனி சிலிர்க்கும்”. இவ்வாறு அவர் தியானிக்கிறார், பார்க்கிறார், பேசுகிறார், திரிகிறார், பாடுகிறார், திரும்பிவருகிறார். அந்த அன்புக்குரியவரை அணுகி, இனிமையான பேச்சுக்களால் சுகமடைய வை.
இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
சுலோகம் 3:
கஸ்தூரீ-திலகாயதே(அ)தி⁴னிடிலம்ʼ கர்ணே(அ)ஸிதாப்³ஜாயதே
நேத்ராம்போ⁴ஜ-யுகே³(அ)ஞ்ஜனாயத இயம்ʼ கா³டா⁴ தம꞉ஸந்ததி꞉ |
கண்டே² நீல-ஸராயதே கடி-தடே ஶ்யாமாய-சேலாயதே
ஸாஹாய்யாத் ஸ்மர-ஶாஸிதா(அ)ம்பு³ஜ-த்³ருʼஶா-மானந்த³-கந்தா³யதே ||
சுலோகம் 3 - பதம்பிரித்து:
கஸ்தூரீ-திலகாயதே அதி⁴னிடிலம்ʼ கர்ணே அஸித அப்³ஜாயதே
நேத்ர அம்போ⁴ஜ-யுகே³ அஞ்ஜனாயத இயம்ʼ கா³டா⁴ தம꞉ஸந்ததி꞉ .
கண்டே² நீல-ஸராயதே கடி-தடே ஶ்யாமாய-சேலாயதே
ஸாஹாய்யாத் ஸ்மர-ஶாஸிதா அம்பு³ஜ-த்³ருʼஶாம்ʼ ஆனந்த³-கந்தா³யதே
விளக்கமும் குறிப்புகளும் :
அடர்ந்த இருளின் தொடர்ச்சியானது, தாமரைக்கண்ணியரான இளம்பெண்களுக்கு, நெற்றிமீது கஸ்துரிதிலகமாகவும், காதில் செருகப்பட்ட நீல அல்லியாகவும், தாமரைக்கண்களில் இட்ட மையாகவும், கழுத்தில் நீலமணி சரமாகவும், இடையில் கரும்பச்சை சேலையாகவும் விளங்குகிறது. காமதேவனால் ஆணையிடப்பட்டு, (அவர்களுக்கு) உதவிகரமாக இருப்பதால் அவ்விருள், ஆனந்தத்துக்குக் காரணமாகிறது.
இது ஶார்தூ³ல-விக்ரீடி³தம் - வரிக்கு 19 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்.
அபிசாரிகை - காங்கிரா சித்திரம் |
சுலோகம் 4:
கா³டா⁴ந்த⁴காரமபி சேதன-ஜால-த்³ருʼஷ்டே꞉
ஸஞ்சார-லோப-கரணே த்³ருʼட⁴-ப³த்³த⁴-கச்ச²ம் |
ஸித்³தா⁴ஞ்ஜனம்ʼ விதனுதே ஹ்யபி⁴ஸாரிகாணாம்ʼ
ஆஶ்சர்யமேஷ மத³நாபி⁴த⁴-வைத்³யராஜ꞉ ||
சுலோகம் 4 - பதம்பிரித்து:
கா³ட⁴ அந்த⁴காரம்ʼ அபி சேதன-ஜால-த்³ருʼஷ்டே꞉
ஸஞ்சார-லோப-கரணே த்³ருʼட⁴-ப³த்³த⁴-கச்ச²ம் .
ஸித்³தா⁴ஞ்ஜனம்ʼ விதனுதே ஹி அபி⁴ஸாரிகாணாம்ʼ
ஆஶ்சர்யம்ʼ ஏஷ மத³நாபி⁴த⁴-வைத்³யராஜ꞉
விளக்கமும் குறிப்புகளும் :
அடர்ந்த இருளானது, உயிரினங்களின் பார்வை செல்வதை இல்லாமல் செய்ய (கண்களை மறைக்க) உறுதி கொண்டு கச்சைக்கட்டியிருக்க, (இருட்டிலும் மறைந்த பொருட்களை காணவை க்கும்) சித்தாஞ்சனம் என்ற மந்திர மையை , அபிசாரிகைகளுக்கு வழங்குகிறான் மன்மதன் என்ற பேர்கொண்ட பெரிய வைத்தியர் தலைவன். என்ன ஒரு ஆச்சரியம் இது.
இது வஸந்ததிலகம் - வரிக்கு 14 அக்ஷரங்கள் கொண்ட சந்தம்
இரவில் அன்புக்குரியவரைத்தேடிச் செல்லும் நாயகியருக்கு அபிசாரிகைகளென்று பெயர். காமதேவன் தரும் ஆற்றலால் அவர்களுக்கு இருளும் ஒரு தடையல்ல. என்பது இங்கு பொருள்.
Comments
Post a Comment